அதை ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி உதயகுமார் பெற்றுக்கொண்டார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து திருக்குறள் பாடிய படி நடனம் ஆடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக மாநகராட்சி பொறியாளர் பழனிசாமியை, சாரட் வண்டியில் அமர வைத்து கரகாட்டம், மயிலாட்டம், மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்