சேலம் மாவட்டம் முழுவதும் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை வழங்கப்பட்டது. பத்து நாட்கள் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. சேலம் குகைமூங்கில் பாடி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் அனைத்து பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.