நேற்று காலை அவர் தனது வீட்டுக்கு மீண்டும் திரும்ப வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிவேல் வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. 23 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.