இந்த கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இந்த விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச்செயலாளர், கைத்தறி துறை இயக்குநர், மாநகராட்சி மேயர், எம்.பி.க்கள், கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற கைத்தறி ஜவுளி வகைகளை பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் இந்த கைத்தறி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி வருகிற 11-ஆம் தேதி வரை நடக்கிறது. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.