ஆனால் அவர் இதை கண்டுகொள்ளாமல் அனுசரித்து செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் அரவிந்த் அந்த பெண்ணுக்கு மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுக்க தொடங்கினான். அவரை அந்த பெண் கண்டித்துள்ளார். இதற்கிடையில் அந்த பெண் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்த பெண் பாலியல் தொந்தரவு குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் விசாரணை நடத்தினார். இதையடுத்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரவிந்த் மற்றும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத மகேஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு