சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், தலைவர் விஜய் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சூரஜ் என்பவர் வெயில் காரணமாக மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.