சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

வைகாசி விசாகத்தையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பூஜையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தொடர்ந்து தேரோட்டத்தை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். கயிலை வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நமசிவாய முழக்கங்களை எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். ராஜகணபதி கோயில் அருகிலிருந்து புறப்பட்ட வைகாசி விசாகத் தேரோட்டம் இரண்டாவது அக்ரஹாரம் பட்டை கோயில் சின்ன கடைவீதியில் வழியாக சுகவனேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்தது.

தொடர்புடைய செய்தி