சர்வதேச போட்டியில் பதக்கம்வென்ற சேலம் மாணவர்களுக்கு பாராட்டு

ஐதராபாத்தில் சர்வதேச ரிங் பைக்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 14-15, 16-17, 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த அணியில் சேலத்தை சேர்ந்த 5 மாணவர்கள் பங்கேற்று பரிசு பெற்றனர். இந்த போட்டியில் மாணவர்கள் ஸ்ரீசஞ்சய், விக்னேஷ் ஆகியோர் தங்கப்பதக்கமும், சந்துரு, லோகசாரதி ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், சுஜித் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். 

இதையடுத்து பரிசு மற்றும் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு கிக்பாக்சிங் அசோசியேசன் மாநில துணை தலைவர் குட்டி என்கிற ஓ. கே. சிவமகேந்திரன், தமிழ்நாடு ரிங்பைக்ட் அசோசியேசன் பொதுச்செயலாளரும், ரிங்பைக்ட் குழுவின் நடுவருமான கோ. சிவபெருமாள், ஏன்சியண்ட் சோட்டோகான் கராத்தே டோவின் துணை செயலாளர் மற்றும் பயிற்சியாளர் கனகசிவம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி