சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்த மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி கட்டாயம். நிகழ்ச்சிகள் நடத்த குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு திங்கட்கிழமை நள்ளிரவு முதல் வருகிற 8-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம், மத நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.