இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது என்று போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார். அதேபோல், விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவைக்கு இது பொருந்தாது. இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற 16-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?