சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவை நடத்துவதற்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். 

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது என்று போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார். அதேபோல், விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவைக்கு இது பொருந்தாது. இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் வருகிற 16-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி