இதனிடையே நேற்று காலை அந்த அலுவலகத்தை திறந்து சுத்தம் செய்வதற்காக ஊழியர் ஒருவர் வந்தார். அப்போது அலுவலகத்திற்குள் அருள்குமார் நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி, இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள், அருள்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிர்வாண நிலையில் அவர் பிணமாக கிடந்ததால் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களைச் சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இதனால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்ததாக விசாரணை நடத்தி வருகின்றனர்.