சேலம்: பெண்ணுக்கு அடிக்கடி தொல்லை; பெண் விபரீத முடிவு

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சேனைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாயி. இவருடைய மகள் சுந்தரி (வயது 28). இவருக்கும், இ. காட்டூரைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சுந்தரி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று காலை சுந்தரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சுந்தரியிடம் வரதட்சணை கேட்டு அவருடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுந்தரி தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே சுந்தரி தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலைக் கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி