சேலம் பொன்னம்மாபேட்டை திப்பு நகரில் வசிக்கும் தம்பதியரின் குழந்தையை நேற்று மாலை மர்ம பெண் ஒருவர் கடத்த முயன்றார். அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, குழந்தையை மீட்டனர். மேலும், பொதுமக்கள் அந்த பெண்ணிற்கு தர்ம அடி கொடுத்து அம்மாபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.