கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35). இவர் நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்குள் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து அவர் அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் வீராணம் பகுதியை சேர்ந்த முருகன் (54) என்பவரது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளும், அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (76) என்பவரது மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்து அவர்கள் போலீஸ் நிலையங்களில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.