எம். பாலப்பட்டி ஊராட்சியில் கிராமசபைகூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு

உலக தண்ணீர் தினத்தையொட்டி சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம். பாலப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் திருவரங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பசுமை தாயகம் மாநில இணை பொதுச்செயலாளர் சத்ரியசேகர் கலந்து கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பேசினார். 

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களை பாதுகாத்தல், பாலப்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து நீர்நிலைகளை பாதுகாக்கவும், அவற்றை மேம்படுத்தும் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் செல்வம், ராஜா, வில்சன், சசிகலா, அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் சங்கர் நன்றி கூறினார். பின்னர் அருள் எம்.எல்.ஏ.விடம், அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை 2 மாதங்களாக மூடப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர். உடனே அதனை பார்வையிட்ட அருள் எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறி கழிப்பறையை சீரமைக்க ரூ. 5 லட்சம் நிதி பெற்றுக் கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி