ஒட்டுமொத்த தமிழ் சமூக மக்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க சட்டசபையில் நான் குரல் கொடுத்து வருகிறேன். எனது பல கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசியலில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் நேரத்தில் தி. மு. க. , அ. தி. மு. க. போன்ற திராவிட கட்சிகளுடன் நாம் கூட்டணி அமைத்து வருகிறோம். தந்தை பெரியார் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரை பற்றி நேர்எதிரான கருத்துக்களை சீமான் பேசி வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுதான் ஒரே தீர்வாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு வேல்முருகன் எம். எல். ஏ. கூறினார்.