சேலத்தில் கழுதை பால் கூவிக்கூவி விற்பனை

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கழுதை பால் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. விருத்தாசலத்தை சேர்ந்த முரளி என்பவர் ஒரு கழுதையை, அதன் குட்டியுடன் அழைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று கழுதை பால் விற்பனை செய்து வருகிறார். அதுவும் கழுதை பால் வாங்கலயோ, கழுதை பால் என்று தெருக்களில் அவர் கூவி, கூவி விற்பனை செய்து வருகிறார். அதாவது ஒரு சங்கு கழுதை பால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். அவரிடம் பொதுமக்கள் போட்டி போட்டு கழுதை பாலை வாங்கி செல்கின்றனர். 

இதுகுறித்து முரளி கூறுகையில், ஒரு கழுதையை ரூ. 40 ஆயிரத்துக்கு குட்டியுடன் வாங்கி இருக்கிறேன். 6 மாதம் பால் கறக்கும். அதனை கொண்டு ஒவ்வொரு ஊராக சென்று கழுதை பாலை விற்பனை செய்வேன். 6 மாதம் முடிந்த பிறகு வேறு கழுதையை குட்டியுடன் வாங்கி பால் விற்பனை செய்வேன். கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இந்த வியாபாரத்தை என்னுடைய தாத்தா காலத்தில் இருந்தே செய்து வருகிறோம். என்னதான் மருந்து, மாத்திரைகள் வந்தாலும் இயற்கையான உணவுக்கு இன்னும் மவுசுதான் என்றார்.

தொடர்புடைய செய்தி