இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி முதல்வர் தேவி மீனாளிடம் கேட்டபோது, அந்த வாலிபருக்கு கொரோனா மட்டுமின்றி சிறுநீரகம் பாதிப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு இணைநோய்கள் இருந்தது. இதன் காரணமாக அவர் உயிரிழந்து விட்டார், என்றார். சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு வாலிபர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'முதலமைச்சருக்கு சட்னியா?.. சாம்பாரா?'.. அண்ணாமலை விமர்சனம்