சேலம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் இன்று சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி மண்டலங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக, அம்பேத்கர் நகர் பகுதிகளில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகளை அவர் ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.