தேசிய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சேலம் மாணவருக்கு பாராட்டு

புதுடெல்லியில் சப்-ஜூனியர், ஜூனியருக்கான தேசிய வலுதூக்கும் போட்டி நடந்தது. இதில் தமிழக அணி சார்பில் சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் மா. வெ. ஹரின் என்பவர் பங்கேற்றார். இவர் சப்-ஜூனியர் பிரிவில் கலந்துகொண்டு 355 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.

இவர் மேலும் 2 பிரிவுகளில் பங்கேற்று வெள்ளிப்பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார். இவரை தமிழ்நாடு வலுதூக்கும் விளையாட்டு நலச்சங்க தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலாளர் இளங்கோவன், சேலம் வலுதூக்கும் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் பழனிமுத்து ஆகியோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும் மாணவருக்கு பள்ளியின் முதல்வர் அனிதா ரமேசும் வாழ்த்துத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி