கோவை குப்பனூரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் தயாழிதன் (வயது 19). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்களில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் சேலம் ஜான்சன்பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.