இந்த ஆய்வில் இதுவரை 58 ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் இதுவரை வெள்ளை சர்க்கரை 9450 கிலோ கிராம், செயற்கை நிறம் 0.12 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெல்லம் கண்காணிப்பு உணவு மாதிரிகள் 14 மற்றும் சட்ட உணவு மாதிரிகள் 7 எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் கண்டறியப்பட்ட 15 வெல்லம் தயாரிப்பு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறியதாவது: பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து வெல்லம் தயாரிப்பு ஆலைகளிலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.