சேலம் மாநகர பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சேலம் மணக்காடு பகுதியில் ரோந்து சென்ற அஸ்தம்பட்டி போலீசார், பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற கவியரசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி