சேலம் சித்தா கல்லூரி மாணவி வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையான டேக்வாண்டோ பயிற்சியாளருடன் காதல் வயப்பட்டார். விடுமுறை நாட்களில் அவருடன் சுற்றித்திரிந்த மாணவியிடம், வயதுக்கு மீறிய உறவை கைவிடுமாறு தந்தை வரதராஜன் கூறியுள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த வரதராஜன், அவரை கொலை செய்தார். தலைமறைவான வரதராஜனை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு, செல்போன் சிக்னல் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.