சேலம்: பாமக இளைஞரணி செயலாளர் உட்பட மூவர் கைது

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் வந்த கவுதம் (37), மணிகண்டன் (36), அசோக் (29) ஆகியோரை விசாரித்ததில், கவுதம் பாமக இளைஞரணி செயலாளராக இருப்பது தெரியவந்தது. இவர்கள் புகையிலை கடத்துபவர்களை மிரட்டி பணம் பறித்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி