அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வேன் டிரைவரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொட்டிப்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 34), செல்வமணி (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் சுமார் 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சிவராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2.30 மணி நேரம் நீடித்த ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு