குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி குட்கா விற்பனை செய்யும் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 2 ஆயிரத்து 352 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது. அதில், 136 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 251 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 136 கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்து அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.