இந்நிலையில், உலக அமைதிக்காகவும், சுமங்கலி பெண்களின் நலனுக்காகவும் நேற்று இரவு கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட சுமங்கிலி பெண்களுக்கு மாங்கல்ய பிரசாதமும், பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சாந்தமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு