இதனால் கணவன்-மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அரிகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்