மனைவி-மாமியாருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊமை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது43). இவரது மனைவி செல்லம்மாள். இருவரும் சேலத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். மனைவி மீது பழனிவேல் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று(அக்.02) இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல், கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதை தட்டி கேட்ட மாமியார் பழனியம்மாளையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த தாய், மகள் 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான புகாரின்பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி