ஓமலூரில் சாலையோர கடைகளால் விபத்து அபாயம்: பொதுமக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் போக்குவரத்து சிக்னல் அருகே, நோ பார்க்கிங் எச்சரிக்கை பலகையை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் சாலையோர கடைகளால் பொதுமக்களுக்கு போதிய நடைபாதை வசதி இல்லை. கனரக வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக வைக்கப்பட்ட பேரிகார்டு உள்ள குறுகிய சாலை வழியே பொதுமக்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி