அதில், அரசு அறிவித்தபடி ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ்மொழித் தேர்வு, நியமனத் தேர்வு உள்ளிட்டவைகளில் தேர்ச்சி பெற்று தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். அவர்களுக்குப் பதிலாக நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தொகுப்பூதியத்தில் அரசு பணியமர்த்த வேண்டும். மேலும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர்.