இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இறந்துபோன முதியவரின் பெயர் ரவி என்பதும், அவர் சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்த முதியவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பற்றி கருங்கல்பட்டி பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அதுபற்றி எந்த விவரமும் கிடைக்கவில்லை. எனவே, இறந்துபோன ரவியின் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.