சேலம் மாவட்டம் ஓமலூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா மாவட்டத்தலைவர் அமலா ராணி தலைமையில் கொண்டாடப்பட்டது. ஓமலூர் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு கொடியேற்றி, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றமடைய உறுதிமொழி ஏற்கப்பட்டது.