ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சேகரிக்கப்படும் காய்கறி மற்றும் பழக் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக கிலோ ரூ.1 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் இதனை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.