தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதற்கான முழு முதற்காரணம் தற்போதைய மாநில அரசு மத்திய அரசுக்கு புதிய மொழியாக்கத்தை கொடுத்தது தான். ஒன்றிய அரசு என்ற சொல்வதால் ஒரு வேற்றுமை உணர்வு விதைக்கிறது. இந்த புதிய மொழியாக்கம் ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் போக்கை ஏற்படுத்தி இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. மாநில அரசு, ஒன்றிய அரசு என்று சொல்வதை கைவிட வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொன்னால் மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்றுதான் சொல்ல நேரிடும். மத்திய அரசு, திட்டங்களுக்கு நிதி தருவதில்லை என முதல்வர் ஸ்டாலின் பொதுவாக சொல்லக்கூடாது. எந்தெந்த திட்டங்களுக்கு நிதி தரவில்லை என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறினார்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி