மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைக்கு வினாடிக்கு 1,073 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1,235 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 2,693 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட அதிகரித்தது. அதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.30 அடியாக இருந்தது.