மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய கழிவு காவிரி ஆற்றில் கலந்து தண்ணீர் மாசு அடைந்துள்ளது. இதனால் காவிரி நீர் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதற்கு பதில் அளிக்கவில்லை. மேட்டூர் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாத இடங்களில் கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த கழிவுகள் கலப்பதை தடுக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டசபை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
நாளை கருப்பு கொடி போராட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு