இருப்பினும் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுவந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியாக குறைந்தது. இந்த நிலையில் டெல்டா பாசன பகுதியில் மழை பெய்ததன் காரணமாக பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வதும், குறைவதுமாக இருந்தது. இவ்வாறு உயர்ந்த நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறையாமல் நேற்று வரை நீடித்து வருகிறது. அதாவது மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 231 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.