அப்போது தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி கடப்பாரையால் மகன் வெங்கடாஜலத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த கொலை குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உதயவேலன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குழந்தைவேல் ஆஜரானார்.