நேற்று (டிசம்பர் 30) அதிகாலை குடிசையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் நங்கவள்ளி தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. குடிசையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. குடிசையில் இரும்பு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த பெரியசாமி உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையாகி விட்டார்.
இந்த விபத்து குறித்து நங்கவள்ளி போலீசில் பெரியசாமியின் மனைவி காந்திமதி புகார் செய்தார். அதில் அவர் தனது கணவர் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் பெரியசாமி இறப்பைச் சந்தேக மரணம் என நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.