சேலம்: 11 மணி நேரம் சைக்கிள் ஓட்டி சாதனை

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், நடுவலூர் ஊராட்சி, 2வது வார்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் சூர்யா (20) நாமக்கல் அரசு கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் கன்னியாகுமரி உள்ள திருவள்ளுவர் சிலை 25ஆம் ஆண்டு வெள்ளி விழா, திருக்குறள் நூல் தேசிய நூலாக அறிவிப்பு மற்றும் இளைஞர்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலியுறுத்தி நேற்று (டிசம்பர் 23) நடுவலூர், சிவன் கோயில் முன்பு கடந்த உலக சாதனையான 8 மணிநேர சாதனையை முறியடித்து, தற்போது 11 மணிநேரம் 8 வடிவத்தில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார். 10 மணிக்கு நிறைவு செய்தார். இளைஞரின் முயற்சிக்கு பொதுமக்களும் ஆதரவு தந்து வாழ்த்தினார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பையா சால்வை அணிவித்து மாணவனை பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி