சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் கருமந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மலை மேகங்கள் வெண்பனி போர்த்தியது போல் ரம்மியமான காட்சியை அளிக்கிறது.