சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் தனியார் கல்லூரி மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, மாணவிகளை இறக்கிவிட்டபோது எதிரே வந்த மினி டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.