தெடாவூர்- தம்மம்பட்டி இடையே சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

ஆத்தூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் உள்ள தெடாவூர்- தம்மம்பட்டி சாலை, கோபாலபுரம்- கந்தசாமி புதூர் சாலை, வடகுமரை- புனல்வாசல் சாலை, காட்டுக்கோட்டை- மணிவிழுந்தான் சாலைகளில் ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் முடிவடைந்த சாலை மற்றும் பாலம் பணிகள் ஆய்வு நடந்தது. சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிகுமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆத்தூர் உட்கோட்ட சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் துரை, ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் அன்புசெழியன், உதவி பொறியாளர் ஓம்பிரகாஷ், இளநிலை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி