கீரிப்பட்டி தாய் தந்தை கண் முன்னே குழந்தை பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி மேல் கனவாய் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜவேல் (24) இவருக்கு ஒன்றரை வயது யோகித்ராஜ் என்கிற மகன் உள்ளார். ஆத்தூர் தனியார் பள்ளிக்கு டிரைவராக உள்ள நிலையில் இவர் ஆத்தூரில் இருந்து மல்லியகரை கீரிப்பட்டி, கந்தசாமிபுதூர் பகுதி வழியாக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளையும் கொண்டு செல்கிறார்.

இவர் வழக்கம்போல் நேற்று காலை தனது வீட்டில் இருந்து வண்டி எடுக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது குழந்தை யோகித்ராஜ் வாகனத்தின் பின்பகுதியில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்காமல் தந்தை வண்டியை பின்னால் இயக்கிய போது பின் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு. தாய் தந்தை கண்முன்னே தந்தையின் வாகனத்தில் குழந்தை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி