சேலம்: லேத் பட்டறையில் பயங்கர தீ விபத்து.. வீடியோ

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி மாதா கோவில் தெருவில் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் லேத் பட்டறை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் செந்தில்குமார் வெல்டிங் பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது லேத் பட்டறையில் புகை மூட்டமாக காணப்பட்டதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பட்டறையில் தீ பற்றியது. மேலும் தீ மெளமெளவென பட்டறை முழுவதும் பரவி எரிய தொடங்கியது. 

இதை அறிந்து அங்கு வந்த பட்டறை உரிமையாளர் செந்தில்குமார் கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு நேரம் என்பதாலும் லேத் பட்டறை பூட்டி இருந்ததாலும் அப்போது அங்கு ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி