இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கூட்ட அரங்கில் இருந்த நான்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் தீர்மானங்களை முழுமையாக வாசிக்க விடாமலும் சபையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், அப்போது திடீரென வார்டு உறுப்பினர் செந்தில் என்பவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நால்வர் மீதும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளின்படி இரண்டு பேரூராட்சி மன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்து பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!