இந்த சம்பவத்தில் டிஐஜி உமா, எஸ்பி கௌதம் கோயல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து முகமூடி கொள்ளையர்களை தேடி வந்தனர். முதல் கட்டமாக கார் டிரைவர் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்து கிடுக்கு பிடி விசாரணையில் கோவை சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் (40), ரவிக்குமார் (48), அஸ்வின் காந்த் (51), கோவை சேர்ந்த சந்தியா (29) கொள்ளையில் ஈடுபட்ட இரண்டாவதாக நான்கு பேரையும் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சி ஊட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜயகுமார் மற்றும் சந்தியா ஆகிய இருவரும் டிடெக்டிவ் ஏஜென்ட் என்பதும் தெரிய வந்தது. இவர்களை நான்கு பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!