மூவரும் ரத்த காயங்களுடன் வெட்டுப்பட்டு நிலையில் குழந்தைகள் அருள் பிரகாஷ், வித்யா தாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தோட்டத்தில் இருந்த அசோக்குமாரை கெங்கவல்லி போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நிகழ்விடத்தில் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்தும், சொத்து தகராறில் கொலை நடைபெற்றதா? அல்லது வேறு காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு